பித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்

உங்களுக்கு ராஜ யோகம் இருக்கிறது என்று சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனாலும் உங்களுக்கு தொடர்நது கஷ்டங்களும் சோதனைகளும் வந்து கொண்டு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு பித்ரு தோசம் இருக்கலாம்!. எந்த நல்ல பலனையும் தடுக்கும் சக்தி இந்த யோகத்துக்கு உண்டு!.

ராகு 5ல் இருந்தால் தந்நலம் கருதாதவராக இவர் இருப்பார. ஆனால் இவரது உதவிபெற்று முன்னேறியவர்கள் இவரை உதாசீனம் செய்வார்கள்.

கேது 5ல் இருந்தால் ஊருக்கெல்லாம் உபகாரியாக இருப்பார். ஆனால் இவர்வீட்டில் இவருக்கு மரியாதை இருக்காது. எல்லாருக்கும் நல்லது செய்யும் இவருக்கு மட்டும வேறு யாரும் நல்லது செய்ய மாட்டார்கள்.

லக்னத்துக்கு 9ல் ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களின் பிள்ளைகள் பகையாளிகளாக இருப்பார்கள். பூர்விக சொத்துக்கள் அழியும். அல்லது அந்த சொத்துக்கள் சம்பந்தமாக வழக்குகளை சந்திக்க நேரிடும்.
லக்னத்துக்கு 9ல் கேது இருந்தால் அம்மாவழி,அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருக்கிறது என்றே அர்த்தம்.!

கொலை, தற்கொலை போன்ற செயற்கையான மரணத்தினால் அந்த ஆன்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும். இதனால் 4ம்,5ம் தலைமுறைகூ்ட தோசத்தை அனுபவிக்க நேரிடும். முன்னோர்களின் சொத்துக்கள் மட்டும் நாம் அனுபவிப்பது இல்லை அவர்கள் காலத்து பாவங்களையும சேர்த்தே நாம் அனுபவிக்கிறோம். பித்ரு தோஷத்தினால் நாம் செய்யும் எந்த ஒரு புண்ணிய காரியமும் நமது கணக்கில் சேரவிடாது தடுக்கும் சக்தி வாய்ந்தது!.

நவக்கலச யாகம் - ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில்

இந்தியாவில் ஸ்ரீ விஜ்வாமித்திரர் க்கு என்றே தனியாக கோவில் இருக்கிறது. தமிழ்நாடு , திருநெல்வேலி மாவட்டம் ,கூடங்குளம் அனுமின் நிலையம் பக்கத்தில் விஜயாபதி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் அந்த ஸ்ரீ விஸ்வாமித்ரர் மகாலிங்கசுவாமி திருக்கோவில் இருக்கிறது. விஜயாபதி என்பது வெற்றிக்கு சொந்தமான இடம் என்று பொருள்.

கர்மாவை மாற்றும் விதியையும் மாற்றி அமைத்த வித்தகர் இந்த விஸ்வாமித்திரர் மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில்

முன்பொருசமயம் ராமனையும் லட்சுமணனையும் தில்லை வனக்காட்டிற்கு இந்த முனிவர் அழைத்து சென்று யாகம் செய்தார். அந்த யாகத்தை கெடுக்க தாடகை என்னும் அரக்கி வந்தாள். யாகத்தை கத்திட ராமனும் லட்சுமணனும் அந்த தாடகையை கொன்றார்கள். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அந்த பிரம்மஹத்தி தோசம் நீங்கிட நம்ம விசுவாமித்திர மகரிஷி நவக்கலச யாகம் செய்தார். அவர் யாகம் செய்த இடம்தான் இந்த விஜயாபதி என்னும் ஊர். சுமார் 350 வருடங்களுக்கு முன்புவரை அது மிகப்பெரிய நகரமாக இருந்ததாம். இந்த விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வாணிபம் செய்துள்ளார்கள்.
ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் விஜயாபதி
 இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவில் ம் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் ! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவில்லும் ஒரு ஆதாரம் ஆகும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார். விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து  .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்
ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் - விசுவாமித்திரர்-விஜயாபதி
இந்த ஊருக்குப் போய் நவக்கலச யாகம் செய்த பின்னர் 100 நாட்களுக்குள் நீண்ட காலப் பிரச்சனைகள் தீரும். இந்த யாகம் செய்தபின்னர் ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் 9 நபருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் இப்படி 12 அமாவாசைகளுக்கு செய்ய வேண்டும். இதன்மூலம் நமது பித்ரு கடன் என்ற பித்ரு தோஷம் நீங்கிவிடும். அதன்பின்பு நமது வாழ்க்கை வளமாகிவிடும்.

பித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்